Achievers
இணையமும் மணக்குது :)
திருமணம் ஆகி தனிக்குடித்தனம் போகும் பெண்களுக்கு அம்மாக்கள் கொடுக்கும் ஒரு விலை மதிப்பில்லாத சீதனம், சமையல் துணுக்குகள் தான். அது சரி, கொஞ்சமாச்சும் சாமியால் தெரிந்தால் துணுக்குகள் சொல்லலாம், சமையலே தெரியாதவர்களுக்கு? டைரி போட்டு எழுதிக்கொடுப்பது எல்லாம் அந்தக் காலம். “என் பொண்ணு விவரம் தெரிஞ்சவ, இன்டர்நெட் பாத்து சமைச்சு பொழச்சுக்குவா” என்று பெண்ணை பெற்ற அம்மாக்கள் கெத்து போட ஆரம்பிச்சுட்டாங்க. அட ஆமாங்க! சமையல்-ல அரிச்சுவடி-ல ஆரம்பிச்சு அட்டை டூ அட்டை வரை சமையலில் வறுத்து தாளிக்க (?!) புட் ப்ளாஸ் (Food blogs), யூடுப் சானல்கள் (YouTube channels) நிறைய வந்தாச்சு. இன்டர்நெட் பாத்து சமைக்கிற எல்லாருக்கும் ரொம்ப பரிச்சயமானது, .http://www.rakskitchen.net/-ல் கமகம-க்கிற ரெசிப்பீஸ் ராஜேஸ்வரி-யின் கைமணம் தான். யுவதி-காக ஒரு சின்ன உரையாடல்,
உங்களுக்குதெரிஞ்ச சமையல் நுணுக்கங்களை உலகிற்கு பகிரும் எண்ணம் எப்படி வந்தது?
திருமணம் ஆன பிறகு, எல்லோரையும் போல், நானும் சமையல் கற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைத்த பொழுது, அம்மா, மாமியாரிடம் கேட்டு தெரிந்து கொள்ளும் சமையல், புதிதாக ஏதேனும் சமைத்துப்பார்த்தால் அதை முன்பெல்லாம் சமையல் குறிப்பாக, நோட்டில் எழுதி வைத்துக்கொள்வேன். ஒரு கட்டத்தில், நம்மை போல புதிதாக கற்றுக்கொள்பவருக்கு உபயோகமாக இருக்க வேண்டும் என்று நினைத்து, நான் வலைத்தளத்தில் பதிவு செய்ய ஆரம்பித்தேன். நானும் இதே போல சில வலைத்தளங்களில் பார்த்தும் கற்றுக்கொண்டு இருக்கிறேன். இதனால் பிற்காலத்தில் அதே சமையல் குறிப்பை நானும் பார்த்து சமைப்பதற்கும் உதவும் , பிறருக்கும் உபயோகமாக இருக்கும்.
புகைப்படத்தோடசமையலை எளிமையாக சொல்வது தன் உங்கள் வலைப்பூவின் தனிச்சிறப்பு. இதற்காகவே நிறைய உழைப்பு தேவைப்படுமே?
ஆமாம், நான் சமைக்கக்கற்றுக்கொண்ட பொழுது, என்ன தான் நம் வீட்டில்
உள்ளவர்களிடம் தொலைபேசியில் கேட்டோ, வலைத்தளத்தில் படித்தோ செய்தலும், நடுநடுவே, நிறைய சிறு சிறு சந்தேகங்கள் எழும். குறிப்பாக சமையல் பற்றி ஒன்றுமே தெரியாத பெண்கள்/ ஆண்கள் முதல் முறை சமைக்கும் பொழுது எழும் சந்தேகங்கள், ஒவ்வொரு நிலையிலும் நாம் சமைக்கும் ரெசிபி சரியாக வருகின்றதா என சரி பார்த்துக்கொள்ள உதவும். மேலும் ஒருவர் இந்த புகைப்படங்களை மட்டும் பார்த்தாலே, படிக்காமலே அந்த ரெசிபி பற்றிய ஒரு ஐடியா கிடைக்கும். இது தான் அதன் தனி சிறப்பு.
ஒருபுட் ப்ளாக் ஆரம்பிக்க எனென்ன விஷயங்கள் தேவை?
சமையல் பற்றி முதலில் நமக்கு சொல்லித்தரும் அளவிற்காவது தெரிந்திருக்க
வேண்டும். அளவு, செய்முறையை தெளிவாக புரியும்படி சொல்லும் ஆற்றல். இணையதளம் / கம்ப்யூட்டர் பற்றி சிறிது தெரிந்திருக்க வேண்டும். இணையதளம்,ஒரு கம்ப்யூட்டர்/ லேப்டாப். ஒரு தெளிவான புகைப்படம் எடுத்து தரும் கேமரா/மொபைல் போனிலேயே இதை நாம் எளிதாக செய்யலாம்.
நம்மஊர் மட்டும் அல்லாமல் பல மாநில, பல ஊர், பல நாட்டு சமையல் வகைகள் எல்லாம் செய்கிறீர்களே. எப்படி?
இணையத்தளத்தில், youtube , Instagram , pinterest , facebook போன்ற சமூக வலைத்தளங்களை பார்க்கும் பொழுது, அதில் பகிரப்படும் நிறைய ரெசிபிக்கள்
பார்த்தவுடன் செய்யத்தூண்டும் வகையில் உள்ளன. சமையலில் ஆர்வம்
இருக்கும் எவரும் இதனை செய்ந்துபார்ப்பார்கள். நானும் அதனை, என்
குடும்பத்திற்கேற்ப சிறிது மாற்றங்கள் செய்து, முயற்சி செய்து, நன்றாக வந்தால், எல்லோர்க்கும் உபயோகப்படும் வகையில் பகிர்கிறேன்.
இல்லத்தரசியா வீட்டையும், தனி ஆளாக ப்ளாக்–ஐயும் எப்படி நிர்வகிக்கிறீர்கள்?
என்னுடைய கணவரும், பிள்ளையும் சென்றபிறகு, வீடு வேலைகளை
முடித்துவிட்டு, நிறைய நேரம் எனக்கு கிடைத்தது. அந்நேரத்தை உபயோகமாக
ஏதேனும் செய்யலாம் என்றே பிளாக் ஆரம்பித்தேன். என் பிள்ளை
பள்ளியிலிருந்து வரும் வரை என்னால் பிளாகிற்காக செலவிட முடியும்.
– சிவரஞ்சனி ராஜேஷ்
Achievers
இது வித்யா பாலன் மேஜிக்!
சக்தி வாய்ந்த ஆளுமைகள் – பகுதி 4
தமிழ் பெயர் மாதிரி இருக்கே, தமிழ் இல்லனாலும் நிச்சயம் தென்–இந்தியா தான். முக லட்சணமே நல்லா காட்டிக் கொடுக்குதே?
ஆம். வித்யா பாலன் தென்-இந்தியா தான். மும்பை-யில் பிறந்தாலும், அவரது வீட்டில் தமிழும் மலையாளமும் மாறி மாறி ஒலிக்குமாம். கேரளா மாநிலம் பாலக்காடு அருகிலுள்ள ஒட்டபள்ளம் தான் இவரகளது சொந்த ஊர்.
இவ்வளவு பக்கத்துல இருந்தும் ஏன் தென்–இந்திய மொழிகள்–ல நடிக்காம இந்தியிலேயே நடிக்கறாங்க? இவ்வளோ அழகை யாராவது வேண்டாம் –ன்னு சொல்வாங்களா?
ஆம், சொன்னார்கள். வித்யா பாலன் முதன் முதலில் நடிக்க இருந்தது, மலையாளத்தில், அதுவும் மோகன்லால் ஜோடியாக. சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது, அதனால் ராசி இல்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டது. தமிழில் கதாநாயகி பாத்திரத்திற்கான முகவெட்டு இல்லை என்று, 2 படங்களில் படப்பிடிப்பு தொடங்கியும் நீக்கப்பட்டார்.
ஆச்சரியமாக இருக்கிறதா? இன்னும் நிறைய ஆச்சர்யங்கள் இந்தக் கட்டுரையில் உண்டு.
வித்யா பாலன், 1 ஜனவரி, 1979-ம் ஆண்டு மும்பையில் பி.ஆர்.பாலன் – சரஸ்வதி தம்பதியருக்கு பிறந்தார் சிறு வயதில் ஷபானா ஆஷ்மியையும் மாதுரி தீக்ஷித்-ஐயும் பார்த்து சிறந்த சினிமா நடிகை ஆக வேண்டும் என்று தீராத கனா கண்டார்.
அவரது ஆசைக்கு வீட்டிலும் எதிர்ப்பு சொல்லவில்லை, ஆனால் படிப்பையும் விடக்கூடாது என்பது தான் அவர்களுடைய ஒரே நிபந்தனை.
தன் பள்ளிப்படிப்பை முடித்தவுடன், ஏக்தா கபூரின் ‘ஹம் பாஞ்ச் (Hum Panch) ‘ என்னும் தொலைக்காட்சி தொடரில் ‘ராதிகா’ என்னும் கதாபாத்திரத்தில் நடித்தார், அது சூப்பர் ஹிட் ஆகி எல்லார் வீடுகளிலும் பிடித்தவளாகிவிட்டாள்.
அதைத் தொடர்ந்து மேலும் சில தொலைக்காட்சி தொடர்களுக்கு வாய்ப்புகள் வர, பிடிவாதமாக மறுத்தார்.
அவரது கனவெல்லாம் சினிமா மீதே இருந்தது.
தென்னிந்திய சினிமா வாய்ப்புக்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அப்படி வந்தது தான் மோகன்லால் மலையாள பட வாய்ப்பு மற்றும் அந்த 2 தமிழ் படங்கள்.
- 2001-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கிய ‘ரன்’ படத்தில் முதலில் மீரா ஜாஸ்மின் கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானவர், வித்யா பாலன். முதல் கட்ட படப்பிடிப்பிற்கு பிறகு, நீக்கப்பட்டார்.
- அதே வருடத்தில் ‘மனசெல்லாம்’ படத்தில் ஸ்ரீகாந்த் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி, பின் நீக்கப்பட்டார்.
வித்யா பாலனுக்கு கதாநாயகிக்கான வசீகார முகம் இல்லை, ராசி இல்லை என்ற எண்ணம் தென்னிந்திய சினிமா உலகில் அப்பொழுது பதிந்திருந்தது.
அந்த நிராகரிப்பு அவருக்கு மிகுந்த வலியைக் கொடுத்ததாக சொல்லியிருக்கிறார். தான் அழகில்லை என்றும், தன்னை தானே அருவெறுப்பாக உணர்ந்ததாகவும், கண்ணாடியையே பார்க்காமல் இருந்ததாகவும் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.
அன்று முடிவு செய்தார், இனி தமிழ் & மலையாளம் சினிமாவிற்கு திரும்பி வரக்கூடாது என்று. தசாவதாரம் படத்தில் அசின் கதாபாத்திரத்திற்கு வாய்ப்பு வந்த போது கூட, மறுத்துவிட்டார். அந்தப் பிடிவாதம் கறைய இவ்வளவு ஆண்டுகள் ஆயிற்று, ஒரு வழியாக தமிழ் சினிமாவிற்கு ‘நேர்கொண்ட பார்வை’ மூலம் அடி எடுத்து வைத்து விட்டார்.
தென்னிந்திய சினிமா புறக்கணிப்பிற்கு பிறகு, விளம்பரப்படங்களில் கவனம் பதிக்க ஆரம்பித்தார். 90-க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்து விட்டார். அதே சமயம் தன் சினிமா கனவையும் விடவில்லை, படிப்பையும் விடவில்லை. சமூகவியலில் முதுகலை முடித்திருந்தார்.
- 2003-ம் வருடம், வித்யாவின் கனவு நனவானது, ஆம்! Bhalo Theko என்ற பெங்காலி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
- 2005-ம் ஆண்டு, பரிநீத்தா என்ற இந்தி படத்தில் நடித்ததன் மூலம், அவரது திறமை இந்தி பட உலகில் வேகமாக பரவியது. அந்த படத்திற்காக பிலிம்பேர், அறிமுக நடிகை விருதினை பெற்றார்.
அன்றிலிருந்து அவருக்கு ஏறுமுகம் தான். லகே ரஹோ முன்னாபாய், ஹே பேபி , பூல் பூலையா என்று வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் முன்னனி இடத்தை தக்க வைத்து கொண்டார்.
வித்யா பாலன் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்தும், ஒரு தனி முத்திரை பதிப்பதுடன், மக்கள் மனதில் தாக்கத்தை எற்படுத்தவும் தவறியதில்லை. ‘பா‘ திரைப்படத்தில் இளம் மகளிர் மருத்துவராகவும் அதே சமயம் முதிரா முதுமையுடைய 12 வயது மகனுக்கு தாயாகவும் நடித்தார், கவர்ச்சி கன்னி சில்க் -காக ‘தி டர்ட்டி பிக்ச்சர்’-ல் உடல் மொழியில் வசீகரித்தவர், மணிரத்தினம் இயக்கிய ‘குரு’வில், தண்டுவடம் பாதித்த பெண்ணாக சர்க்கரை நாற்காலியில் அமர்ந்து கொண்டே, அழுகை காதல் நெகிழ்ச்சி வருத்தம் என்று அவ்வளவு உணர்ச்சிகளையும் அந்த கண்களிலேயே கொட்டி வைத்தார்.
41-வயதாகும் இந்த இளமை பதுமைக்கு அழகு மட்டும் குறையவே இல்லை! நண்பராக அறிமுகமாகி கணவராகவும் நண்பராகவும் இருக்கும் சித்தார்த் கபூரும் ஒரு சினிமா தயாரிப்பாளரே.
திருமணத்திற்கு பிறகான சினிமா பயணமும் சிறப்பாக இருக்கிறதென்றால், சித்தார்த், வித்யாவின் திறமை மீது வைத்திருக்கும் மரியாதையும், அவருக்கான சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பதும் ஒரு முக்கிய காரணம்.
தற்போது கணிதமேதை ‘சகுந்தலா தேவி’-யாக கலக்கிக்கொண்டிருக்கும் வித்யா பலன்-ஐ எத்தனை முறை திரையில் பார்த்தாலும் நம்மை அறியாமல் ‘வாவ்’ சொல்லவைத்து விடுகிறார். ‘அகழாதே, நொடிகூட நகராதே’ என்று நேர்கொண்ட பார்வை படப்பாடலை அஜித் மட்டுமல்லாது நம்மையும் பாடவைத்து விடுகிறது இந்த அழகான ஆளுமை!
சிவரஞ்சனி ராஜெஷ் மென்பொருள் பொறியாளர். எழுதுவது பிடிக்கும் - புத்தகம் எழுதியதில்லை. பெரிய பெரிய பத்திரிக்கைகளில் கட்டுரைகள எழுதியதில்லை. ஒரெ ஒரு சின்ன வலைப்பூ, இணைய இதழ்களில், சில சிற்றிதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளேன். படிப்பது பிடிக்கும் - இலக்கியங்கள் அவ்வளவும் படித்ததில்லை. தமிழ் ஜாம்பவாங்களின் புத்தகங்கள் கரைத்துக் குடித்ததில்லை. ப(பி)டித்த புத்தகங்கள் பல உண்டு. எதார்த்த வாழ்க்கைகயை புத்தகங்களில் வேறு பரிணாமத்தில் படிக்கப் பிடிக்கும். சமைக்க பிடிக்கும் - அதைவிட வகையாக சாப்பிடுவது பிடிக்கும். (கூட்டிக்கழித்துப் பார்த்தால் கணக்கு சரியாக வரும்)
இவையெல்லாம் விட, சின்ன சின்ன சந்தொஷங்கள் மிகப் பிடிக்கும்.
Achievers
ரோஷினி நாடார் மல்ஹோத்ரா (தலைவர், HCL நிறுவனங்கள்)
‘HCL-ன் தலைமை பொறுப்பை ஏற்கிறார், ரோஷினி நாடார் மல்ஹோத்ரா’ என்ற செய்திக்கு வந்த பெரும்பாலான பின்னூட்டங்கள் அவரின் பெயருக்கு பின்னால் உள்ள இரு வேறு குடும்பப்பெயர்களை சுட்டிக்காட்டியே வருகின்றன. வருடத்திற்கு சுமார் 71 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டும், ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் 43 ஆண்டு கால வரலாற்றின் முதன் பெண் தலைமை, இந்திய தகவல் தொழில்நுட்ப உலகின் 3-ம் பெண் தலைமை என்பதைத் தாண்டி, இந்த (இணைய) உலகிற்கு அவரது குடும்ப பெயரே முன் நிற்பது அபத்தமா? அறிவின்மையா? என்பது புரியாத புதிர்.
1976-ல் ஷிவ் நாடாரால் 6 பொறியாளர்களால் தொடங்கப்பட்டது HCL சாம்ராஜியம், இன்று 1.5 லட்சம் பணியாளர்களுடன் 44 நாடுகளில், தகவல் தொழில் நுட்பம் மட்டுமல்லாது வானூர்தியியல், இராணுவம், மென்பொருள் உருவாக்கம், கொள்கலன் தயாரிப்பு, தொலைத் தொடர்பு சேவைகள், நுகர்வோர்க்கான மின்பொருட்கள், மருத்துவ சேவைகள் என பல துறைகளில் தனி முத்திரை பதித்து வருகிறது. ஷிவ் நாடாரின் ஒரே மகளாயினும் ஒரு மிகப் பெரிய சாம்ராஜியத்தின் தலைமை நாற்காலியில் அமர்வது எளிதான காரியமில்லை.
ஷிவ் நாடரின் பூர்வீகம் திருசெந்தூராக இருப்பினும், ரோஷினி வளர்ந்ததென்னவோ டெல்லியில் தான். ஊடகத்துறையில் அவருக்கு இருந்த ஆர்வத்தால் வானொலி, தொலைக்காட்சி மற்றும் திரைப்படம் சம்பந்தமாக இளங்கலைப் பட்டம் பெற்றார். கெல்லாக்ஸ் வணிகவியல் கல்லூரியில் (Kellogg School of Management) நிர்வாகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். படிப்பு முடிந்தவுடன் இங்கிலாந்தில் உள்ள ஸ்கை நியூஸ் மற்றும் உலகப்புகழ் பெற்ற அமெரிக்கா-வின் CNN தொலைகாட்சியிலும் செய்தி தயாரிப்பாளராக பணி புரிந்தார்.
தனது 27-ம் வயதில் HCL நிறுவனத்தில் இணைந்தார். தலைமை நிர்வாகியாக திறம்பட நிர்வகித்தார்.ஷிவ் நாடார் அறக்கட்டளையின் அறங்காவலராகவும் செயல்பட்டு வருகிறார். சிறந்த கல்வி முறை மூலம் தலை சிறந்த தலைவர்களை உருவாக்குவதே இந்த அறக்கட்டளையின் லட்சியம். இந்த அறக்கட்டளையின் முக்கிய அங்கமான ‘வித்யா கியான்’ (VidyaGyan) அமைப்பு நிறுவியதிலும் மிகச் சிறப்பாக செயல்படுத்திக்கொண்டிருப்பதிலும் முதன்மைப் பங்கு ரோஷினியுடையது. உத்திரபிரதேசத்தின் பின் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு சிறப்பான கல்வி, விளையாட்டு, அறிவியல் போன்ற அனைத்து பிரிவுகளிலும் சிறப்பான பயிற்சி அளித்து நம் நாட்டின் திறமையான எதிர்காலத்தை உருவாக்கி வருகிறார். VidyaGyan மூலம் இவர் நடத்தி வரும் உண்டு, உறைவிடப்பள்ளியில் ஏறத்தாழ 2000-கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இங்கு கல்வி மட்டுமல்லாது, கணினி பயிற்சி, கலை அரங்கம், அறிவியல் ஆய்வகம், கணித பயிற்சிகூடம், சர்வதேச தரத்திலான உள்/வெளி விளையாட்டு அரங்கங்கள் என்று வியக்க வைக்கும் கட்டமைப்பு வசதிகளுடன் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. சிவ்நாடார் அறக்கட்டளையின் மூலம் சென்னையில் சிவ சுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரியை இலாப நோக்கம் இல்லாமல் நடத்திவருகிறார்.
சமூக அக்கறையில் இதோடு, நின்று விடவில்லை ரோஷினி. எவரும் யோசிக்காத ஒரு விஷயத்தை செய்து கொண்டு இருக்கிறார். இயற்கையின் மீதும், மற்ற உயிரினங்கள் மீதும் இயல்பிலேயே அன்பும் அக்கறையும் கொண்டவர். அவரது இந்த குணம் தான், ‘The Habitats Trust’ அமைப்பை 2018-ல் தொடங்க வைத்தது. இந்த அமைப்பு இந்தியாவின் இயற்கை வாழ்விடங்களையும் அதன் பூர்வீக உயிரினங்களையும் பாதுகாப்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
ரோஷினி-யின் தொழில் மற்றும் சமூக செயல்பாட்டிற்கு பல விருதுகளும் கௌரவங்களும் அவருக்கு கிடைத்துள்ளது. உலகப் புகழ் பெற்ற ‘போர்ப்ஸ்’ (FORBES) பத்திரிக்கையின் உலகின் ஆளுமை மிக்க 100 பெண்மணிகள் வரிசையில் தொடர்ந்து 3 வருடங்களாக இடம் பிடித்து வருகிறார். 2014ம் ஆண்டுக்கான இளம் வள்ளல் பட்டத்தை என்டிடிவி வழங்கியுள்ளது.
மிகச்சிறந்த இசை திறமையும் மற்றும் யோகாவில் ஆழ்ந்த ஈடுபாடும் கொண்டவர். HCL Healthcare-ன் துணை தலைவர், ஷிகர் மல்ஹோத்திரா தான் இவரது கணவர், ஆர்மன், ஜஹான் என்று இரு மகன்ளுடன் அழகான குடும்பம்.
சமூக வலைதளங்களில்அதிகம் ஆர்வம் இல்லாமல் இருந்தவர், HCL தலைவராக பொறுப்பேற்ற பின் தான், Instagram-ல் இணைந்தார். பணியிடத்தில் நிறைய பெண் தலைமைகளை பார்க்க விரும்புவதாகவும், அதற்கான முன்னெடுப்புகளை செய்யப்போவதாகவும் கூறியிருக்கிறார். ஏறத்தாழ 37000 கோடி சொத்துக்களுடன், இந்தியாவின் முதல் பணக்கார பெண்மணியாக இருக்கிறார். தலைசிறந்த ஆளுமையும் சமூக அக்கறையும் கொண்ட ரோஷினியின் தலைமையில் HCL மேலும் பல சாதனைகள் புரியும் என்பதில் ஐய்யமில்லை!
— தொடரும்.
(அடுத்த வாரம்: கணித மேதை சகுந்தலா தேவியை கண் முன் நிறுத்திய வித்யா பாலன்)
சிவரஞ்சனி ராஜெஷ் மென்பொருள் பொறியாளர். எழுதுவது பிடிக்கும் - புத்தகம் எழுதியதில்லை. பெரிய பெரிய பத்திரிக்கைகளில் கட்டுரைகள எழுதியதில்லை. ஒரெ ஒரு சின்ன வலைப்பூ, இணைய இதழ்களில், சில சிற்றிதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளேன். படிப்பது பிடிக்கும் - இலக்கியங்கள் அவ்வளவும் படித்ததில்லை. தமிழ் ஜாம்பவாங்களின் புத்தகங்கள் கரைத்துக் குடித்ததில்லை. ப(பி)டித்த புத்தகங்கள் பல உண்டு. எதார்த்த வாழ்க்கைகயை புத்தகங்களில் வேறு பரிணாமத்தில் படிக்கப் பிடிக்கும். சமைக்க பிடிக்கும் - அதைவிட வகையாக சாப்பிடுவது பிடிக்கும். (கூட்டிக்கழித்துப் பார்த்தால் கணக்கு சரியாக வரும்)
இவையெல்லாம் விட, சின்ன சின்ன சந்தொஷங்கள் மிகப் பிடிக்கும்.
Achievers
சக்தி வாய்ந்த ஆளுமைகள் – பகுதி 2 – இந்திரா நூயி
ஒரு குட்டி கதை சொல்லட்டா?
அது ஒரு சர்வதேச குளிர்பான நிறுவனம். அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியின் மகள் அவரது தனி செயளாளருக்கு போன் செய்து, தன் தாயிடம் பேச வேண்டும் என்று கூறுகிறாள். என்ன காரணம் என்று உரிமையாய் செயளாளர் கேட்க, ‘வீடியோ கேம் விளையாட அனுமதி வேண்டி பேச வேண்டும்’ என்று பதில் அளிக்கிறார். உடனேஅவர், ‘வீட்டுபாடம் செய்தாகிவிட்டதா? சிற்றுண்டி சாப்பிட்டாகிவிட்டதா? சரி, நீங்கள் விளையாடலாம்’ என்று தன் வீட்டு பிள்ளைக்கு சொல்வது போல் சொல்லிவிட்டு, தலைமை நிர்வாக அதிகாரியான அம்மாவிற்கும், குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, தன் வேலையை பார்க்களானார்.
இது நடந்தது உலகின் 4-வது பெரிய குளிர்பான நிறுவனமான PEPSI CO-வில். ஆம், அவரே தான். இந்திரா நூயி.
PEPSI என்று சொன்னவுடன் குளிர்பானத்தை விட நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இந்திரா நூயி.
தமிழ் நாட்டுப் பெண், அமெரிக்க கம்பனியில் தலைமை செயல் அதிகாரி என்பதைத் தவிர நம்மில் பலருக்கு வேறு எதுவும் தெரிந்திருக்கவில்லை. தெரிந்து கொள்வோம் இந்தக் கட்டுரையில்.
1955, அக்டோபர் 28 அன்று சென்னையில் பிறந்தார், இந்திரா கிருஷணமூர்த்தி. அவரது தந்தை வங்கி ஊழியர். தனது பள்ளிப்படிப்பையும், இளங்கலைகல்லூரிப்படிப்பையும் சென்னையில் முடித்தார்.
பெரியதாக சாதிக்க வேண்டும் என்ற கனவை விதைத்ததில் இந்திராவின் அம்மாவிற்கு பெறும் பங்குண்டு. அவர்தான் தினமும் இரவு உணவு அருந்திய பின், தாங்கள் என்னவாக ஆக வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இந்திராவைவும், அவரது சகோதரியும் பேச சொல்லி போட்டி வைப்பாராம், அதில் சிறந்ததை தேர்வு செய்து ஊக்கமளித்துகொண்டே வந்ததாக நிறைய நேர்காணல்களில் சொல்லியிருக்கிறார்.
இளங்கலை படிப்பை சென்னையில் முடித்தவுடன், IIM கல்கத்தா-வில் முதுகலையை முடித்து விட்டு, ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தில் பணி செய்த போது, பெண்களுக்கான சானிடரி நாப்கின் தயாரித்து சந்தைபடுத்தியதில் முக்கிய பங்கு இந்திராவுடையது. சிறப்பாகவே போய்க்கொண்டிருந்த அவரது பணிவாழ்க்கையில் இன்னும் பெரிய உயரங்களை எட்ட விரும்பினார். உலகின் மிக மதிப்புவாய்ந்த ‘யேல்’ (Yale) பல்கலைகழகத்தில் மேலாண்மை படிக்க அமெரிக்கா சென்றார்.
சென்னை-யில் பிறந்த நடுத்தர குடும்பத்து பெண், நிறைய கனவுகளுடன், கொஞ்சம் பணத்துடனும்
அமெரிக்காவில் படித்த போது, நேர்முகத்தேர்வுக்கு செல்லும் தன் நண்பர்கள் கோட்- சூட் அணிந்து செல்வதைப் பார்த்து, தனக்கும் கோட் வாங்க நினைத்தார்.
ஆனால், அதற்கான 50 டாலர் பணம் தன்னிடம் இல்லாததால், பகுதி நேரமாக ஒரு ஹோட்டலில் வரவேற்பாளராக பணிபுரிந்து ஒரு கோட்-சூட் வாங்கி நேர்காணலுக்கு சென்றார். ஆனால், அது அவருக்கு அதை அணிவதற்கு வசதியாக இல்லை. அதனாலேயே அவரால் நேர்முகத்தேர்வை சரியாக செய்யாமல்,
அந்த வேலை கிடைக்கவில்லை.இதை அவரது விரிவுரையாளரிடம் சொல்லிய போது, ‘Be Yourself’ (நீ, நீயாக இரு) என்று கூறினார்.
அதிலிருந்து தனக்கு எது சரியாக, வசதியாக எது இருக்கிறதோ அதையே தான் செய்வார். PEPSICO வின் CEO-வாக இருந்த போது கூட அடிக்கடி தனக்குப் பிடித்த சேலையிலேயே அடிக்கடி அலுவலகம் செல்வார், அதனாலேயே அவருக்கு ‘CEO of Saree’ என்ற ஒரு செல்லப் பேரும் உண்டு. அமெரிக்காவில் படித்து முடித்து நல்ல வேலையும் கிடைத்தாகிவிட்டது,
ஆனாலும், அந்த வேலையில் முத்திரை பறிக்க இரண்டு விசயங்கள் முட்டுக்கட்டையாக இருந்தன.
1 – அவர் அமெரிக்கர் அல்ல,
2 – அவர் ஒரு பெண்.
இதையெல்லாம் தாண்டி அவரது திறமையை நிரூபிக்க பல மடங்கு வேலை செய்யவேண்டியிருந்தது.
“தினமும் காலை எழும்போது, ஒரு ஆரொக்கியமான பயம் என் மனதில் இருக்கும், இந்த உலகம்
வேகமாக சுழல்கிறது, நாம் இன்னும் வேகமாக ஓட வேண்டும்” என்று தனக்குள்ளாகவே கூறிக்கொள்வாறாம் இந்திரா.
1994-இல், தன்னுடைய 44-ம் வயதில், PEPSI CO -வில் சேர்ந்தார். அன்றிலிருந்து பெப்சி-யின் முக்கியமான நகர்வுகளில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். அடிக்கடி, விற்பனை அங்காடிகளுக்கு சென்று, தன் நிறுவன பொருட்கள் எவ்வாறு, காட்சி படுத்தப்பட்டிருக்கிறது என்பதை ஆராய்ந்து அதிலுள்ள குறை/நிறைகளை ஊழியர்களிடம் சொல்வார். நாம் ஒரு விற்பனையாளர் என்பதை விட, ‘நுகர்வோர்’ என்று தன் ஊழியர்களிடம் அடிக்கடி கூறுவார்.
PEPSI என்றாலே, உடல் நலத்திற்கு ஏற்றதில்லை, என்பதை மாற்றியதில் இவருக்கு பெரும்பங்குண்டு. ‘
Tropicana’ & ‘Quaker’ நிறுவனங்களை வாங்கியதன் மூலம்,ஆரொக்கியமான பழ ரசங்கள், உணவு தானியங்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தியது.
இதற்கெல்லாம் மூலக்காரணம் இந்திராவே தான். இவருடைய மற்றொரு வெற்றி மந்திரம், தன் ஊழியர்களையும் தன் மற்றொரு குடும்பமாக பார்ப்பது. வேலை-வாழ்வு சமன்நிலை-யை கண்டிப்பாக கடைபிடிக்க வைப்பார். ஒரு நிறுவனம் அதி வேகத்தில் செல்ல சிறந்த ஊழியர்கள் இருந்தால் மட்டுமே முடியும் என்பார்.
ஒரு நேர்காணலில், தான் சிறந்த அம்மாவாக என்றுமே இருந்ததில்லை என்று கூறியிருக்கிறார். தன் மகள்களின் பள்ளி பெற்றொர் சந்திப்பிற்கு பல நாட்கள் சென்றதில்லை என்றும் வருத்தப்பட்டிருக்கிறார். ஒவ்வொரு வெற்றியாளர்களுக்கு பின்னாலும் (ஆணென்ன? பெண்ணென்ன?) நிச்சயம், அவரது குடும்பம் / குடும்ப உறுப்பினர்கள் இருப்பார்கள். இந்திராவின் இந்த வெற்றிக்கு அவரது கணவரின் பங்கு மிக முக்கியமானது, மனைவியின் பணிக்கு முழு சுதந்திரம் குடுத்து, அவர்களது வெற்றியை, வளர்ச்சியை ரசிக்கும் கணவன்மார்கள் இங்கு மிகக்குறைவு.
இந்திரா PEPSI CO-வின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்று, அதன் வருவாயை 2.5 மடங்கு பெருக்கியிருக்கிறார்.
பல ஆயிரம் கோடி வருவாய் ஈட்டும் அலுவலகத்தில் இருக்கும் போது பிரசர் குக்கராக இருப்பவர், வீட்டிற்கு வந்ததும் ஒரு தாயாக, மனைவியாக, மகளாக மாறிவிடுவதாக கூறியிருக்கிறார்.
ஒரு நாளில் 18 மணி நேரம் அவர் வீட்டில் கர்னாடக இசை ஒலித்துக்கோண்டே இருக்கும், இசையும் பக்தியும் இந்திராவிற்கு பிடித்த விஷயங்கள்.
7 ஆண்டுகள் PEPSI CO -வின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த இவர், மொத்தம் 12 வருடங்கள் PEPSI CO-வில் பணி புரிந்துள்ளார். 2019, மார்ச் மாதம் முதல் அமேசான் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் பணிபுரிந்து வருகிறார்.
மேலாணமை மட்டுமல்ல இவர் சிறந்த கிரிகெட் ஆட்டக்காரர், சர்வதேச கிரிகெட் குழுவின் இயக்குனர்களுள் ஒருவராகவும் இருக்கிறார்.
பெரிய பெரிய கனவுகள், அதை விட பெரிய லட்சியங்கள், இவற்றுடன் கடின உழைப்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம்!
-சந்திப்போம் சிவரஞ்சனி
Achievers
சக்தி வாய்ந்த ஆளுமைகள் – பகுதி 1
பெண்களையும் சக்தியையும் பிரித்துப் பார்க்கத் தேவையில்லை. உலகளவில் விரிந்து கிடக்கும் பல இந்திய தொழில் சாம்ரஜியங்களில் பெண் ஆளுமைகளின் பங்கு மிகப் பெரியது. அத்தகைய பெண் ஆளுமைகளை பற்றி இந்த தொடரில் அறிந்து கொள்வொம். பெயரளவில் மட்டுமே நமக்கு பரிச்சியமானவர்களின் வெற்றிப் பக்கங்களை புரட்டுவோமா?
சுதா மூர்த்தி
‘Infosys’ – இந்த ஐடி சாம்ரஜ்ஜியத்தை கேள்விப்படாதவர்கள் சொற்பமே. இந்தக் குழுமத்தின் அறக்கட்டளையின் தலைவர் சுதா மூர்த்தி.
முதல் பெண் பொறியாளர்
கர்நாடகாவின் ஹூப்லி மாவட்டத்தின் முதல் பெண் பொறியியல் பட்டதாரி. அந்தக்காலத்தில் பொறியியல் என்பதே ஆண்களுக்கு மட்டுமானதாக இருந்தது. 1960களில் அவர் கல்லூரியில் சேர்ந்த பொழுது, வகுப்பில் இருந்த 150 மாணவர்களில் இவர் மட்டும் பெண். அந்தக் கல்லூரியில் பெண்களுக்கென்று தனி கழிப்பறை கூட கிடையாதாம், எங்கு இது குறித்து கூறினால் தன் படிப்பு தடை பட்டு விடுமோ என்று, அதை சிரமப்பட்டு சமாளித்ததாக கூறியிருக்கிறார்.
பெண் பிள்ளைகளுக்கு தனி கழிவறை எவ்வளவு முக்கியத்துவம் என்பதை உணர்ந்திருந்த அவர், தன் இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் மூலம் நாடு முழுவதும் 16,000 கழிவறைகளை கட்டியிருக்கிறார். அது இல்லை, இது இல்லை என்று குறை கூறுவதை விட இருப்பதைக் கொண்டு முயற்சித்தால் எதையும் சாதிக்கலாம். எனக்கு இது கிடைக்கவில்லை, பிற்காலத்தில் நான் பிறருக்கு இதை செய்வேன் என்ற உத்வேகமே சுதா மூர்த்தியின் வெற்றிக்கான அடிப்படை.
TELCO-வில் வேலை
பொறியியல் முடித்தவுடன், டாடா வின் TELCO-வில் பொறியாளர் பணிக்கான நேர்முக அழைப்பில், பெண்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என்றிருந்தது. அதை சுட்டிக்காட்டி டாடா நிற்வாகத்திற்கு, ‘எதிலும் முன்னொடியாக இருக்கும் டாடா குழுமத்தில், பாலின பாகுபாடு இருப்பது சரியல்ல’ என்று கடிதம் எழுதினார். ஆச்சரியமாக, அதே பணிக்கு சிறப்பு நேர்வகத்தேர்வின் மூலம் அப்பொழுதே TELCO-வில் பொறியாளர் பணிக்கு நியமிக்கப்பட்டார். டாடாவின் முதல் பெண் பொறியாளரும் இவரே.
சுதா குல்கர்னி சுதா மூர்த்தி ஆன (காதல்) கதை
சுதா பூனேவில் TELCO-வில் வேலை செய்து கொண்டிருந்த சமயம், புத்தகம் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான சுதா, தனது அலுவலக நண்பர், ப்ரசன்னா (தற்போதைய விப்ரோ தலைவர்)-விடம் இரவல் வாங்கி படிப்பார். அந்த புத்தகங்கள் எல்லாம் நாரயண மூர்த்தியின் புத்தகங்கள். இந்த ஒற்றை புள்ளியில் ஆரம்பித்து நட்பில் தொடங்கி ஹோட்டல், சினிமா என்று காதலில் முடிந்தது. அப்போதெல்லாம் இருவரும் வெளியில் சென்று செலவு செய்யும் போது, செலவில் தன்னுடைய பங்கை வரவு வைத்துக்கொள்ளச் சொல்வாராம் நாராயண மூர்த்தி. சுதாவும் வரவு வைத்துக்கொண்டே வந்தாராம், மொத்த தொகை 4000 ரூபாய். அதை கடைசி வரை மூர்த்தி, தரவே இல்லை என்றும், அவர்களது திருமணம் முடிந்து, சுதா அதை கிழித்துப் போட்டு விட்டதாகவும் ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.
இன்ஃபோசிஸ் தொடங்க சுதா வித்திட்ட விதை
திருமணம் முடிந்து மும்பை குடியேறிய பிறகு, மூர்த்தி, தனது கனவுத் திட்டமான இன்ஃபோசிஸ் ஆரம்பிப்பதாக சொன்னார். அப்போது சுதா தன்னுடைய சேமிப்பான 10,000ரூபாய் கொடுத்து, அவருக்கு 3 வருட அவகாசமும் கொடுத்தார். ஆம், அந்த மூன்று வருடங்களில், குடும்பத்தை குழந்தைகளை கவனிக்கும் பொறுப்பை ஏற்றார்.
நாராயண மூர்த்தி முழுமையாக தன் சாம்ராஜ்ஜியத்தை கட்ட ஆரம்பித்தார். சுதா கொடுத்த நம்பிக்கையிலும் பணத்திலும், தன் வீட்டிலேயே அரம்பித்தது தான் இன்ஃபோசிஸ். இன்று உலக அளவில் கொடி கட்டிப் பறக்கிறது.
அந்த சமையத்தில் சுதாவின் உழைப்பு அசாதாரணமானது. பொறியாளராக, வீட்டின் நிர்வாகியாக, தாயாக, மனைவியாக, இன்ஃபோசிஸ்-க்கு உறுதுணையாக திறம்பட திகழ்ந்தார்.
எளிமையின் அடையாளம்
நம்பிக்கை கொடுக்கும் புன்சிரிப்பு, எளிய பருத்தி செலையே சுதா மூர்த்தியின் அடையாளம். ஒரு முறை லண்டனில், முதல் வகுப்பு விமானத்தில் பயணிக்க காத்திருந்த போது, இவரது எளிமையைக் கண்டு, அங்கிருந்த சக பயணி ஒருவர், ‘கால்நடை கூட்டம்’ (Cattle class) என்று விமர்சித்து, அவரை சாதாரண வரிசையிலும் நிற்கச்சொன்னாராம். அதற்கும், புன்முருவலையே பரிசாக அளித்துவிட்டு வந்ததாக கூறுவார்.
எத்தனை முகங்கள்?
சுதா மூர்த்தியின் மற்றொரு முகம், அவர் ஒரு சிறந்த எழுத்தாளர். குழந்தைகள் புத்தகம், தொழில்நுட்பம், பயணம், சிறுகதைகள், நாவல்கள் என்று கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஏறத்தாழ 35-கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். அதிலும் அவர் மாதத்தில் 20 நாட்கள் இன்ஃபோசிஸ் அறக்கட்டளைக்காக கிராமப்புறங்களுக்கு பயணம் செய்துகொண்டே தான் இருப்பார்.
இவ்வளவு பணிகளுக்கு மத்தியிலும் திரைப்படங்கள் பார்ப்பதென்றால் அவ்வளவு பிடிக்கும் அவருக்கு. வருடத்தில் 300 படங்களாவது பார்த்து விடுவாராம். கதை மட்டுமல்லாது, திரைக்கதை, வ்சனம், தொழில் நுட்பம், இசை, படக்கோர்வை என்று ஒரு திரைபடத்தின் ஒவ்வொறு விஷயத்தையும் நுனுக்கமாக கவனிப்பார். திரைபடத்தில் ‘Pitruroon’ என்ற மராத்தி படத்திலும், ‘Prarthana’ என்ற கன்னட படத்திலும் நடித்துள்ளார்.
இன்ஃபோசிஸ் அறக்கட்டளை
1997 இன்ஃபோசிஸ் அறக்கட்டளையைத் துவங்கி, பின்தங்கிய மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு 2300 வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளார். சுகாதாரம், கல்வி, பெண்கள் முன்னேற்றம், கலாச்சாரம் மற்றும் பண்பாடு என்று பல சமூகப் பணிகளை செய்து வருகிறார். 70,000 நூலகங்கள், 16,000 பொது கழிப்பிடங்கள் இதில் அடக்கம். இதற்கெல்லாம் உத்வேகம் அளித்தது, ரத்தன் டாடா என்று கூறுவார் சுதா.இவரது சாதனைகளை போற்றும் வகையில் ‘பத்ம ஶ்ரி’ விருது வழங்கி இந்திய அரசு கௌரவித்தது. பம்பரம் போல் இன்னமும் சுழன்று கொண்டிருக்கும் சுதா மூர்த்தியின் வயது 69.
இந்தியில் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கிய ‘கௌன் பனேகா கிரொர்பதி’யின் 11-வது சீசனில் கலந்து கொண்டபொழுது, சுதா மூர்த்தின் பாதம் தொட்டு வணங்கினார் பச்சன். பலருக்கும் அது வியப்பாய் இருந்தது. சுதா மூர்த்தியை முழுதாய்த் தெரிந்தவர்களுக்கு அது வியப்பாய் இருக்க முடியாது.
தொடரும்..
எழுதுவது பிடிக்கும் - புத்தகம் எழுதியதில்லை. பெரிய பெரிய பத்திரிக்கைகளில் கட்டுரைகள எழுதியதில்லை. ஒரெ ஒரு சின்ன வலைப்பூ, இணைய இதழ்களில், சில சிற்றிதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளேன். படிப்பது பிடிக்கும் - இலக்கியங்கள் அவ்வளவும் படித்ததில்லை. தமிழ் ஜாம்பவாங்களின் புத்தகங்கள் கரைத்துக் குடித்ததில்லை. ப(பி)டித்த புத்தகங்கள் பல உண்டு. எதார்த்த வாழ்க்கைகயை புத்தகங்களில் வேறு பரிணாமத்தில் படிக்கப் பிடிக்கும். சமைக்க பிடிக்கும் - அதைவிட வகையாக சாப்பிடுவது பிடிக்கும். (கூட்டிக்கழித்துப் பார்த்தால் கணக்கு சரியாக வரும்)
இவையெல்லாம் விட, சின்ன சின்ன சந்தொஷங்கள் மிகப் பிடிக்கும்.
-சிவரஞ்சினி
Achievers
Know Why Go Digital!
Recently we got in touch with Ms Ankita S, Who is the Founder of Spell Bee Carnival and a Publicist. She was recently selected to represent Public relations and why being Online is important at the Women Entrepreneurship Summit. Along with her 100+ women from 18 countries participated in the same. As a professional, she has experience of handling PR and Social Media mandates of brands, individuals across PAN India as well worldwide which includes celebrities, musicians, fashion shows, beauty pageants, individuals and craftsmen, and social cause.
She is remarkable at curation and execution of brand-specific events, doing community-based activities, child safety, and development activities. Before practising as an individual consultant, she was working with the prestigious Fashion PR House wherein she individually executed a few high-level projects for their fashion clients
When asked why online PR or promoting brand or service via social media is important, she said, Marketing and promotion are important tools for any business or individual. Every tool has its own unique benefits that help to bring your business new opportunities and visibility.
However, this channel was misunderstood and neglected by many businesses and people so far. This pandemic situation has made everyone understand why it’s important? People are recognising that Digital PR helps brands to create a presence and identity, both online and offline.
She explains why online as below?
1. A brand is visible to end-user even before they visit your store or get in touch with you
2. Online presence helps buyer or customer to have easier access to all products and service
3. Users can see others view and experience bout the brand
4. Online Articles create a presence in Search Engines
5. You can target the right audience and promote the product
We are wishing her all the best in her future ventures.
-
Motivation4 years ago
அந்த ஒரு மாலை நேரம்
-
Food & Beverages4 years ago
Just Eat Right
-
Fitness5 years ago
How Yoga Mudras & Bharatanatyam activate the body circuits!!!
-
Achievers4 years ago
ரோஷினி நாடார் மல்ஹோத்ரா (தலைவர், HCL நிறுவனங்கள்)
-
Poem4 years ago
விலைமகள்
-
Motivation4 years ago
A journey from being an helpless would-be mother to a strong independent mother
-
Achievers4 years ago
இது வித்யா பாலன் மேஜிக்!
-
Politics4 years ago
The New Education Policy 2020 and What it has in Store